மாதவிடாய் பற்றி இஸ்லாம்

அந்நிய கலாச்சாரங்களாலும் உலகமயமாக்களாலும் சுற்றிவளைக்கப்பட்ட நாம் நபிகளார் போதனைகளை கற்காததன் விளைவாக வீண் சந்தேகங்களை சைத்தான் எம் மனங்களில் விதைக்கின்றான். அதில் ஒன்றுதான் இந்த பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்.
இதை எதோ உலகிலேயே அசிங்கமான
செயல் போலும் பேசக்கூடாத செயல் போலும் இதன் காரணமாக
>பெண்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள்,
>இந்த காலங்களின் போது பெண்கள் எதுவும் செய்யக்கூடாது,
>நகம் வெட்டக்கூடாது,
>பயணம் போகக்கூடாது,
>திருமண வீடுகளுக்கு செல்ல கூடாது,
>மரண வீடுகளுக்கு செல்ல கூடாது,
>ஏன் அல்லாஹ்வின் வேதத்தை ஓதக்கூடாது என்றெல்லாம் நபிகளார் கற்பிக்காத சட்டங்களை தாமாக ஏற்படுத்திக்கொண்டு கஷ்டமே இல்லா மார்க்கத்தை பெண்களை கண்ணியப்படுத்திய மார்க்கத்தை கேவலப்படுத்துகின்றனர். எனவே மாதவிடாய் பற்றி அல்லாஹ்வும் நபிகளாரும் கற்பித்ததை கற்று செயற்படுத்துவோம். இன்ஷா அல்லாஹ்!

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
>யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிடமாட்டார்கள்.
>வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள்.
எனவே, நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர்.
அப்போது,
(நபியே!) மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.”(2:222ஆவது) எனும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.
அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது,
"நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம்" என்று கூறினர்.
எனவே உசைத் பின் ஹுளைர் (ரலி), அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோர் வந்து,
"அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர். எனவே, (மாதவிடாய் ஏற்பட்டுள்ள) பெண்களுடன் நாமும் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன?" என்று கேட்டனர்.
(இதைக் கேட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறமாறிவிட்டது. ஆகவே, (கேள்வி கேட்ட) அவர்கள் இருவர்மீதும் நபியவர்களுக்குக் கோபம் ஏற்பட்டுவிட்டதோ என்று நாங்கள் எண்ணினோம். அவர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றதும் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்ட பால் அவ்விருவரையும் எதிர்கொண்டது.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் பின்தொடர்ந்து ஆளனுப்பி அவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். (அவர்கள் வந்ததும்) அவர்கள் இருவருக்கும் (அந்தப் பாலை) பருகக் கொடுத்தார்கள். தங்கள் மீது நபியவர்களுக்குக் கோபமில்லை என்று அவர்கள் இருவரும் புரிந்துகொண்டனர்.
(ஸஹீஹ் முஸ்லிம் 507)

MDIhapugastalawa யில் இருந்து......

Comments