சுபஹில் மாத்திரம் குனூத் ஓதுவது நபி வழியா?



சுபஹில் மாத்திரம் குனூத் ஓதுவது நபி வழியா?
  •   நபிகளார் எதற்காக ஓதினார்கள்?
நபித் தோழர்கள் எழுபது பேர்களை முனாபிக்குகள் அளைத்துச் சென்று கொன்றபோது ஒரு மாத காலம் அவர்களை சபித்து ஓதினார்கள்.
ஆஸிம் அல் அஹ்வல்(ரஹ்)அவர்கள் கூறினார்கள்: நான், அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் தொழுகையில் குனூத்  குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்என்று பதிலளித்தார்கள். உடனே நான், ‘ருகூவிற்கு
முன்பா? அல்லது பின்பா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ருகூஉவிற்கு முன்புதான்என்று பதிலளித்தார்கள்……. (புஹாரிள் 4096 முஸ்லிம்

  •  எந்தத் தொழுகைகளில் ஓதினார்கள்?
சுபஹ் உற்பட ஐந்து நேரத் தொழுகையிலும்  ஓதினார்கள்.
صحيح مسلم -
عَنِ الْبَرَاءِ قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فِى الْفَجْرِ وَالْمَغْرِبِ.
பராஃ பின் ஆஸிப் (ரலி) அறிவித்தார்.
மஃரிபிலும் ஃபஜ்ரிலும் குனூத் ஓதுதல் (நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தது.  முஸ்லிம்
عن أبي هريرة قال
 : لأقربن صلاة النبي صلى الله عليه و سلم . فكان أبو هريرة يقنت في الركعة الأخرى من صلاة الظهر وصلاة العشاء وصلاة الصبح بعد ما يقول سمع الله لمن حمده فيدعو للمؤمنين ويلعن الكفار
அபூ ஹுரைரா ரலி அவர்கள் லுஹரிலும் இஷாவிலும் சுபஹிலும் ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா என்று கூற்ய பிறகு முஃமீன்களுக்கு துஆ கேட்டும், காபிர்களை சபித்தும் குனூத் ஓதிவிட்டு, இப்படித்தான் நபிகளார் தொழுகை இருந்தட்து என்று கூறுவார்கள். (புஹாரி: 764, முஸ்லிம் பராஃ பின் ஆஸிப் ரலி வழியாக,அபூதாவுத்:1445)

  •   சுபஹில் மாத்திரம் நபிகளார் குனூத் ஓதினார்களா?
அதற்கான ஒரே சான்றாக அஹ்மதில் வரும் ஒரு ஹதீஸைப் பார்க்க முடியும்.
مسند أحمد -
12657 حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ يَعْنِي الرَّازِيَّ عَنِ الرَّبِيعِ بْنِ أَنَسٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ مَا زَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْنُتُ فِي الْفَجْرِ حَتَّى فَارَقَ الدُّنْيَا
நபி (ஸல்) அவர்கள் உலலகைப் பிறியும் வரை சுபகில் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள். (அஹ்மத்: 12657)
பதில்:
  1. புஹாரி முஸ்லிமில் அனஸ் ரலி அவர்களைத் தொட்டு வரும் ஹதீஸுக்கு முறன் படுகின்றது.
 957صحيح البخاري -
عاصم قال : سألت أنس بن مالك عن القنوت فقال قد كان القنوت . قلت قبل الركوع أو بعده ؟ قال قبله . قال فإن فلانا أخبرني عنك أنك قلت بعد الركوع ؟ فقال كذب إنما قنت رسول الله صلى الله عليه و سلم بعد الركوع شهرا أراه كان بعث قوما يقال لهم الققراء زهاء سبعين رجلا إلى قوم من المشركين دون أولئك وكان بينهم وبين رسول الله صلى الله عليه و سلم عهد فقنت رسول الله صلى الله عليه و سلم شهرا يدعوا عليهم

ஆஸிம் அறிவித்தார்: குனூத் பற்றி அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் குனூத் (நபி(ஸல்) அவர்கள் காலத்தில்) நடைமுறையில் இருந்தது தான்என்று விடையளித்தார்கள். ருகூவுக்கு முன்பா? பின்பா? என்று கேட்டேன். அதற்கு ருகூவுக்கு முன்பு தான்என்று கூறினார்கள். ருகூவுக்குப் பிறகு என்று நீங்கள் கூறினார்கள் என ஒருவர் எனக்குக் கூறினாரே என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர் பொய் சொல்லி இருக்கிறார். நபி(ஸல்) அவர்கள் ருகூவுக்குப் பிறகு ஒரு மாதம்தான் குனூத் ஓதினார்கள். நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த முஷ்ரீகீன்களைவிடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையே ஓர் உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்றுவிட்டனர்.) அப்போது நபி(ஸல்) அவர்கள் முஷ்ரீகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள் என்று அனஸ்(ரலி) விடையளித்தார்கள்.
அனஸ் அவர்கள் வழியாக புஹாரி முஸ்லிமில் வரும் அறிவிப்பை ஏற்பதா? அல்லாது அனஸ் ரலி அவர்களே பொய் என்று சொல்லும் அஹ்மதில் வரும் அறிவிப்பை ஏற்பதா?
  1. மேலும் புஹாரி முஸ்லிமில் ஸஹீஹான ஹதீஸ்களில் ஐந்து நேரத்திலும் ஓதியதாக வரும் போது இதில் மட்டும் சுபஹில் மாத்திரம் ஓதியதாக வருகின்றது, எனவே ஸஹீஹான பல ஹதீஸ்களுக்கு பல வழிகளில் முறன் படுவது இது பலவீனம் என்பதற்கு காரணமாகும்.
  2. அடுத்து அந்த அறிவிப்பாளர் தொடரில் வரும் அபூ ஜஃபருர் ராசி என்பவர் மிகப் பலவீனமானவரே. இப்படிப்பட்ட அறிவிப்பாளர் செய்தியை வைத்து ஒரு ஸுன்னாவை அமலை உறுவாக்க முடியாது.
  • அவரைப் பற்றி இப்னு ஹிப்பான்: மக்கள் அவரது செய்தியிலிருந்து தவிர்ந்து கொண்டனர், காரணம் அவரது செய்திகளில் அதிக குளருபடிகள் இருக்கும். (அஸ்ஸிகாத்)
  • மேலும் கூறினார்கள்: அவர் ஆசான்களிடமிருந்து நிறாகரிக்கப்பட்டவைகளை அறிவிப்பதில் தனித்திருப்பார். அவரது செய்தியை ஆதாரமாகப் பிடிப்பது, நம்பகமானவர்களுக்கு நேர்பட்டாலன்றி எனக்கு விறுப்பமில்லை.
  • அபூ ஸுர்ஆ கூறினார்கள்: அதிகம் தவறு விடுபவர்.
  • அஹ்மத்: அவர் பலமானவர் இல்லை
  • இப்படி அதிகமான ஹதீஸ் கலை அறிஞர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டவர். எனவே இப்படி விமர்சிக்கப்பட்டவரின் அறிவிப்பு மகப் பலவீனமாகும்.

  1. அடுத்து இவர பலவீனமான செய்திக்கு முறனாக நபித் தோழர்களி தீர்ப்பு.
سنن الترمذي
 402 – حدثنا أحمد بن منيع حدثنا يزيد بن هارون عن أبي مالك الأشجعي قال : قلت لأبي يا أبة ! إنك قد صليت خلف رسول الله صلى الله عليه و سلم و ابي بكر وعمر وعثمان وعلي بن أبي طالب [ ههنا ]بالكوفة نحوا من خمسين سنة أكانوا يقنتون ؟ قال أي بني محدثم
قال الشيخ الألباني : صحيح

அபூ மாலிக் என்பவர் தன் தந்தையிடம்: தந்தையே நீங்கள் நபிகளாருக்கும், அபூ பக்ர் உமர் உஸ்மான் அலீ (நலி) ஆகியோருக்குப் பின்னால் தொழுதிருக்கின்றீர்கள், அவர்கள் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்களா? என்று கேட்க, மகனே அது புதிதாக உறுவாக்கப்பட்டது. என்று தந்தை கூறினார்கள். (திர்மிதீ: 402, அஹ்மத்) நஸாஇயில் ௰80- அது பித் அத் என்றே வந்துள்ளது.
  1. அதிலும் இன்றைக்கு சுபஹ் குனூத்தில் ஓதப்படும் துஆவைப் பார்த்தால் அது பித்அத் என்பது இன்னும் தெளிவாக விளங்கும். ஏனெனில் அல்லாஹும்மஹ்தினீ என்று ஆரம்பிக்கமு துஆவை சுபஹ் குனூத்தில் ஓத நபிகளார கற்றுக் கொடுக்கவில்லை, மாறாக அது வித்ருக்காக கற்றுக் கொடுக்கப்பட்டது. திர்மிதீ:464 நஸாஇ: 1745
http://www.dharulfalah.com இருந்து

Comments